சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொன் உள்ளத் திரள் புன்சடையின்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=SaeKB96LR80

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.096   பொன் உள்ளத் திரள் புன்சடையின்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

[1]
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு
அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது
எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

[2]
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை
முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும்,
தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது;
இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!

[3]
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது
இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!

[4]
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

[5]
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-
மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

[6]
வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

[7]
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும்,
நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என்
புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!

[8]
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை
எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள்
அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன்
எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

[9]
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம்,
எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது,
எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார்,
எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list