சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.096
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொன் உள்ளத் திரள் புன்சடையின் பண் - திருக்குறுந்தொகை (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=SaeKB96LR80 |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே! | [1] |
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர் தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே! | [2] |
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும், தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது; இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே! | [3] |
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே! | [4] |
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள் ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே! | [5] |
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு- மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும் அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே! | [6] |
வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே! | [7] |
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும், நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என் புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே! | [8] |
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள் அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன் எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே! | [9] |
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம், எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது, எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார், எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே. | [10] |